தூத்துக்குடி:
நாள்தோறும் நிர்வாண மசாஜ் செய்துவிட வேண்டும் என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தங்களை கொடுமைப்படுத்தியதாக அவரது வீடுகளில் பணிபுரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண்கள் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் அதிரவைக்கும் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த சசிகலா புஷ்பா, திமுக எம்பி திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில், தாக்கினார். இந்த விவகாரம் குறித்து  அ.தி.மு.க. கட்சி பொதுச்செயலாளரும் முதல்வருமான  ஜெயலலிதா விசாரணை நடத்தினார். இதன்பின்னர் ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும்  ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டுவதாகவும் பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.
தனால் அதிமுகவில் இருந்து அதிரடியாக அவர் நீக்கப்பட்டார்.
இதையடுத்து சசிகலா புகார் மீது  அடுக்கடுக்கடுக்கான  புகார்கள் போலீசில் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் சென்னை மற்றும் தூத்துக்குடி வீடுகளில் வேலை பார்த்து வந்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய சகோதரிகள் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் இன்று  புகார் மனு ஒன்றை அளித்தார்கள்.
அதில், தங்களை குடிபோதையில் சசிகலா புஷ்பா துன்புறுத்தினார் என்றும்  அவரது கணவரும் மகனும் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தனர் என்றும் புகார் புகார் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும் சசிகலா புஷ்பா தொடர்பாக அதிர்ச்சகரமான தகவல்களை தெரிவித்தனர்.

புகார் கொடுத்த ஜான்சிராணி பானுமதி
புகார் கொடுத்த ஜான்சிராணி பானுமதிl

இருவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“சசிகலா புஷ்பா தினமும் தனது உடைகளை எல்லாம் அவிழ்த்துவிட்டு நிர்வாணமாகத்தான் தூங்குவார்.  அந்த நிலையில் அவர் தூங்கும் வரை நாங்கள் மசாஜ் செய்துவிட வேண்டும் என்று வற்புறுத்துவார்.
அவரது மகன், எங்களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்திருக்கிறார்.  இதை சசிகலா புஷ்பாவிடம்  சொன்னால்,  “நானும் 18 வயசில அப்படிதான்  அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போனேன்.. நீயும் அப்படி அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போ” என்று சொல்வார். .
இந்த சித்ரவதைகள் சென்னையிலும் தூத்துக்குடியிலும் நடந்தது. ரொம்பவும் டார்ச்சர் செய்தார்கள்.
சசிகலா புஷ்பாவுடன் பிலால் என்று ஒருவர் இருக்கிறார்…அவரும்  எங்களை ரொம்ப டார்ச்சர் செய்தார். …  வேலை அசதியால் தூங்கப்போகும்போது,  பிலால் வந்து,  எந்திரி…எந்திரி.. அக்காவுக்கு கால் கையை அமுக்கிவிடு என்று உத்தரவு போடுவார்.  சசிகலா புஷ்பாவின்.. மாதவிடாய் கழிவுகளைக் கூடா நாங்கதான் அகற்ற வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ..
கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்,சசிகலா புஷ்பாவை பார்க்க அடிக்கடி வருவார்.  ..அவர் வந்த உடனே எங்களை வெளியே நிற்கச் சொல்லிவிடுவார்.  பிறகு அவர்கள் இருவரும் அறைக்குள் சென்றுவிடுவார்கள். . அவர்கள் இருவருக்கும்  சாப்பாடு, மது எல்லாம் எடுத்து வைப்போம்.. அவர்கள் குடித்துவிட்டு போடும் கும்மாளம் சொல்லி முடியாது.
சசிகலா புஷ்பாவுக்கு பிலால் தாலி கட்டியது  உண்மைதான். .. இதுபற்றி சசிகலாவின் முதல் கணவரான லிங்கேஸ்வரா கேட்டால், இது என் தனிப்பட்ட விவகாரம் என்று சொல்லிவிடுவார்.
லிங்கேஸ்வராவும் சரியான நபர் இல்லை. அவரும் டார்ச்சர் பேர்வழிதான்.
இவர்கள் தொல்ல பொறுக்க முடியாமல், நாங்கள்  மாடியில் போய் தற்கொலை செய்து கொள்ள இருந்தோம்… அவர்கள்  நடத்துகிற ஹாஸ்டல் சமையல்காரர்கள் தான் எங்களை தடுத்தார்கள். …
தாங்க முடியாமல்  இந்த மாதம்தான் வேலையைவிட்டு நின்றிருக்கிறோம். அவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை வாங்கித்தரவேண்டும்” என்று இரு பெண்களும் தெரிவித்தனர்.