லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக கூச்சலிட்டார்.

பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷூவை வீசினார். இது நவாஸ் ஷெரீப் மார்பில் பட்டது. இதையடுத்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர் அவர் தொடர்ந்து பேசினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.