கேரளாவின் காலடி பகுதியில் நடிகர் டோவினோ தாமஸ் நடித்து வரும் மின்னல் முரளி திரைப்படத்திற்காக கிறிஸ்துவ தேவாலயம் போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டது.
இன்னும் படப்பிடிப்பு முடியாத காரணத்தாலும் , கொரோனா ஊரடங்காலும் ஷூட்டிங் செட்டை அப்படியே விட்டுள்ளனர் .
இந்நிலையில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த சிலர் தேவாலயம் போன்ற செட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.
காலடி பஞ்சாயத்திடம் முறையான அனுமதி பெறாமல் செட் அமைக்கப்பட்டதாக பஜ்ரங் தள் அமைப்பினர் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நியூஸ் மினிட் பத்திரிகை காலடி பஞ்சாயத்திடம் விசாரித்தபோது, பிப்ரவரிக்கு முன்னதாக இது குறித்து படக்குழு அனுமதி கேட்டதாகவும், அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.