அறந்தாங்கி:

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மார்ச் 1ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறந்தாங்கி பகுதி வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முழுமயாக பாதிக்கும், குடிப்பதற்குக்கூட தண்ணீர் கிடைக்காது. ஆகவே இத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கோரி மக்கள் போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட அறந்தாங்கி பகுதி வியாபாரிகள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக்கோரி வரும் மார்ச் 1ம் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.