சென்னை,

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரிய தம்பியின் செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நகை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்றிருந்த மதுரவாயல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பெரியபாண்டி, கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியுடன் அவரது தனிப்படையை சேர்ந்தவர்கள் எடுத்த செல்வி தற்போது வெளியாகி உள்ளது.

அந்த படங்களில் ஆய்வாளர் பெரியபாண்டி மிடுக்காக இளமை துடிப்புடன் இருப்பது தெரிகிறது. இதுபோன்ற ஒரு திறமையான ஆய்வாளர் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக வலைதளங்களில்  பகிரப்பட்டு வருகிறது.