மும்பை: ரோகித் சர்மாவுக்கு பதில் சுப்மன் கில் துவக்க வீரராக விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி 20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அண்மையில் முடிந்த சமீபத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்தது.

அந்த தொடரை 5க்கு பூஜ்யம் என்று இந்தியா கைப்பற்றியது. புதன்கிழமை ஒருநாள் தொடருக்கான போட்டிகள் துவங்க உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற 5வது டி 20 போட்டியில் கேப்டனாக இருந்த ரோகித சர்மா காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

அந்த போட்டியில் அவர் 41 பந்துகளில் 60 ரன் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது அவரால் அடுத்த 2 தொடர்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பதிலாக மாற்று வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக மயங்க் அகர்வாலும், ஒருநாள் தொடரில் பிரிதிவி ஷாவும் விளையாடுகின்றனர்.

மேலும் , உள்ளூர் தொடரில் சமீபகாலமாக அசத்தி வரும் சுப்மன் கில்லும் அணியில் இடம் பெற்றுள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ் போட்டிகளில் அகர்வாலுடன் ப்ரித்வி ஷா இருவரே துவக்க வீரர்களாக விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.