நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடந்தது.

இந்நிலையில், டி.நகரில் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் , தனது மகன் சிம்பு லண்டனில் இருப்பதால், வாக்களிக்க சென்னை வர முயற்சித்தும் ஒரு சில காரணங்களால் அது சாத்தியப்படவில்லை. ஆனால், ஓட்டு போட முடியாததற்கு தன்னிடம் வருத்தம் தெரிவித்தார் என்று கூறினார்.