simbu-story_647_030916020307
சிம்பு என்றாலே சர்ச்சை என்று ஆகிப் போன இந்த காலத்தில் கிட்டத்தட்ட 3 வருடங்களில் இரண்டு திரைப்படம் தான் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் சிம்புவின் காதல் தான் பல காதல்கள் தனது வாழ்கையில் வந்து போயிருந்தாலும் ஹன்சிகாவின் உடனான காதலை மட்டும் மறக்க முடியாமல் இருந்தார். இது ஒரு புறம் இருந்தாலும் தனது படங்களை வெளியிட முடியாமல் யாரோ தடுக்கின்றனர் என்று சில காலம் கூறி வந்தார்.
அதன் பின் தனது சொந்த பணத்தில் வாலு திரைப்படத்தை வெளியிட்டார். படம் நினைத்த அளவுக்கு ஓட வில்லை அதன் பின் பாண்டி ராஜின் இயக்கத்தில் சிம்பு, நயந்தாரா நடித்திருந்த “இது நம்ம ஆளு” திரைப்படத்தை வெளியிட மீண்டும் அந்த ஆசாமிகள் தடுக்க என்ன செய்வார் மறுபடியும் சொந்த பணம் போட்டு வெளியிட்டார்.
படம் சும்மா பிச்சிக்கிட்டு ஓட நஷ்டமான அனைத்து பணங்களையும் ஒரே படத்தில் திரும்ப பெற்றார். இப்படி இருக்கும் போது கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தை வரும் நவம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் இந்த முறையாவது எந்த ஆசாமிகளும் குறுக்கிடாமல் இந்த திரைப்படம் சொன்ன தேதியில் வெளிவருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.