சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வந்தன . இதில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படக்குழு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிம்பு படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று சுரேஷ் காமாட்சி பிறந்தநாளை முன்னிட்டு சிம்பு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து, ‘மாநாடு’ படத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ‘மாநாடு’ திரைப்படத்தில் சிம்பு மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது .