பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியிருக்கிறது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஆர்ப்பாட்டம் போராட்டங்களை அறிவித்தன. கருப்பு தினமாக கடைபிடித்தன.

இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை  விமர்சிக்கும் வகையில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”காந்தி நோட்டிருந்தும் அம்பேலாகிப் போயாச்சு..” என்று துவங்கும் இந்த பாடலில் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு  மக்கள் எந்த அளவுக்கு துன்பப்பட்டனர் என்பதை விவரித்துள்ளார்.

அது மட்டுமல்ல..  பணமதிப்பிழப்புக்கு கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரின் ஆதரவான டுவிட்டையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

பாடல் வரிகளில் ”நோ கேஷ்” என்ற வார்த்தையும் ”கார்டு வைத்து மட்டும் வாழலாம்” , ”கண்ணை மூடிக்கொண்டே படம் பார்கலாம்” என்ற வரிகளும் உள்ளன.

மேலும் பணமதிப்பிழப்பு முடிந்துகூட மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றும் ஜிஎஸ்டி வரி வந்து மக்களை மீண்டும் துன்பத்தில் தள்ளியிருக்கிறது என்றும் பாடல் வரிகள் உள்ளன. .
அதோடு, இதையெல்லாம் கேள்வி கேட்டால் சிறைக்கு அனுப்புகிறார்கள் என்றும் பாடியிருக்கிறார் சிம்பு.

அடுத்த ரெய்டு, சிம்பு வீட்டில்தானோ?