கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற மப்டி படதமிழ் ரீமேக்கை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கைப்பற்றியிருந்தார். ஸ்ரீ முரளி நடித்த கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக்கும், ஷிவ ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடித்து வந்தனர்.

இதற்கிடையில் சிம்பு தாய்லாந்து சுற்றுலா சென்றதால் ஷூட்டிங் பாதியில் நின்றது , மீண்டும் சென்னை திரும்பிய சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார்.

இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிம்புவை மப்டி படத்திலிருந்து நீக்கியுள்ளதாகவும், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், பெங்களூருவில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் சிம்பு சரியாக வரவில்லை என்றும், வந்தாலும் 4 மணி நேரம் மட்டுமே இருந்துள்ளார் எனப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காகத் தேதிகள் தேதிகள் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதனால் தனக்கு பணம் நஷ்டம் அடைகிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.