சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வந்தன . இதில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படக்குழு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிம்பு படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

ஆனால் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர், சிம்பு படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள தயராகவே இருந்தார். சுரேஷ் காமாட்சிக்கு தான் பைனான்ஸ் பிரச்சினை என கூறினார்.

பின்பு பேச்சுவார்த்தை நடந்ததில் சிம்பு தரப்பில் அவரது அம்மா உஷா ராஜேந்திர் பஞ்சாயத்தில் பேசியதோடு, இறுதியாக ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பார் என்றும், ஆனால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தான் படப்பிடிப்பில் இருப்பார், என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு சுரேஷ் காமாட்சியும் ஒப்புக்கொண்டதாக தகவலும் வெளியானது .

தற்போது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘மாநாடு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நடிக்க முடிவு செய்தார் சிம்பு.

சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஐயப்பன் கோயிலுக்கு மாலைபோட்டு விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.