ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில், எதிர்பார்த்ததைப் போலவே, ருமேனிய நாட்டின் சிமோனா ஹாலெப், மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப்போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவாவை எதிர்கொண்டார் ஹாலெப்.

இம்மோதலில், முதல் செட் 6-0 என்ற வகையில் முழுமையாக ஹாலெப் வசம் வந்தது. பின்னர், இரண்டாவது செட்டில் 2-1 என்ற கணக்கில் ஹாலெப் முன்னிலையுடன் ஆடிக்கொண்டிருந்தபோது, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கரோலினா.

இதனால், அதிக சிரமப்படாமலேயே, வெற்றிக் கோப்பை சிமோனா ஹாலெப் கைகளுக்கு வந்தடைந்தது.