புதுடெல்லி: அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பிரீமியர் பேட்மின்டன் லீக் தொடரில், உலக சாம்பியன் சிந்து ரூ.77 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டு, ஐதராபாத் அணியால் தக்கவைக்கப்பட்டார்.

இத்தொடரின் போட்டிகள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் லக்னோ உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளன.

டெல்லியில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 74 இந்திய வீரர்கள் மற்றும் 80 வெளிநாட்டு வீரர்கள் பங்க‍ேற்றனர். ஒவ்வொரு அணியும் தலா ரூ.2 கோடி வரை செலவிடலாம் என்றும், அதேசமயம் ஒரு தனிப்பட்ட வீரருக்கு அதிகபட்சமாக ரூ.77 லட்சத்திற்கு மேல் செலவழித்தல் கூடாது என்றும் விதிமுறை உள்ளது.

ஒவ்வொரு அணியிலும் 11 பேர் வரை இடம்பெறலாம். இவர்களில் அதிகபட்சம் 6 பேர் வெளிநாட்டவராகவும், குறைந்தபட்சம் 3 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த ஏலத்தில், உலக சாம்பியன் சிந்து அதிகபட்ச தொகையான ரூ.77 லட்சத்திற்கு ஏலம் போனார். இவரைக் கொத்திக் கொண்டது ஐதராபாத் அணி. உலகின் நம்பர் 1 வீராங்கணையான சீனாவின் தய் டு யங்கும் அதே தொகைக்கு பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.