பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைகிடமா னதையடுத்து செயற்கை சுவாச கருவி சிகிச்சையுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

 

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது 90சதவீதம் அவர் குணம் அடைந்திருக்கிறார் என்று அவரது மகன் சரண் நேற்று மாலை தெரிவித்தார்.
இன்று மாலை மீண்டும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார் சரண். அவர் வீடியோவில் கூறியது:
மருத்துவமனை இன்று சென்று என் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். என் தந்தையின் நுரையீரலில் முன்னேற் றம் தெரிகிறது. இது முன்னேற்றத்தின் முதல்படி. இன்னும் நீண்ட சிகிச்சை இருக்கிறது. அது அவரது உடலை சீராக மெல்ல மெல்ல குணம் அடையச் செய்யும். அப்பா அறையில் பாடல்கள் ஒலிக்கிறது அதை கேட்டு விரல்களால் தாளம் போடுகிறார்.
என்னிடம் எதையோ எழுதி காட்ட முயன்றார். ஆனால் பேனாவை அவரால் பிடிக்க முடியவில்லை. அடுத்த வாரம் எழுதி காட்டும் அளவுக்கு தேறுவார். அவருக்கு பத்திரிகை படித்துக்காட்டப்படுகிறது. நேற்று முன் தினம் பார்த்ததைவிட இன்று நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவ ருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டாக்டர்களின் சிகிச்சைக்கு அப்பா உடல் நல்ல செயலாற்றுகிறது
இவ்வாறு எஸ்.பி. சரண் தெரிவித்தார்.
’எஸ்பிபிக்கு வென்ட்டிலேட்டர், எக்மோ சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது. அவர் உடல்நிலை சீராக உள்ளது’ என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.