கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பி.பாலசுப்ர மணியம் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற் கை சுவாச கருவி சிகிச்சை யுடன் எக்மோ சிகிச்சை யும் அளிக்கப்பட்டு வருகிறது.
டாக்டர்கள் சிகிச்சை, பிரார்த்தனை களுக்குபிறகு எஸ்பிபி பற்றி நல்ல செய்தி களாக வந்துக்கொண் டிருக்கிறது, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மகன் தெரிவித்திருக் கிறார்.
இன்று சரண் வெளியிட்டுள்ள வீடியோ வில்,’எனது தந்தையின் உடல்நிலை பற்றி இன்றைக்கு சுருக்கமான தொகுப்புத்தான் சொல்லவிருக்கிறேன். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மற்றும் நேற்று முன்தினத்தைவிட இன்றைக்கு அப்பா வின் நுரையீரலில் நல்ல முனேற்றம் உள்ளது. இது அவர் குணம் அடைவதற் கான நல்ல அறிகுறி. பிரார்த்தனைகள் தொடர்ந்து அவருக்காக நடந்து வருகிறது. எனது நண்பர் விஜய் வசநத் தந்தையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். அவருக்காக விஜய் வசந்த்தும் வருத்தத்தில் இருக்கிறார். அவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
இவ்வாறு சரண் கூறி உள்ளார்.

https://www.instagram.com/p/CEbzuemBUET/