கொரோனா வைரஸ் லாக்டவுனால் மூடிப்படிருந்த சென்னை மதுக்கடைகள் இன்று முதல் தமிழக அரசு திறக்கிறது. சமூக இடைவெளிவிட்டு நிற்க சவுக்கு கட்டைகள் கட்டி ஏற்பாடு செய்துள்ளனர். மதுக்கடை திறப்பு பற்றி இணைய தளங் களில் மீம்ஸ் வந்துக்கொண்டிருக்கிறது.


சென்னையில் திறக்கப்படுவது பற்றி சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன், பிரபுதேவா இனைந்து நடித்த ’காதலா காதலா’ படத்தில் கமல் பாடிய, ’காசு மேலே காசு வந்து கொட்டு கிற நேரமிது’ பாடல் பாணியில், ’நாக்கு மேல நாக்கு வந்து சொட்டுகிற நேரமிது வாசக் கதவ ராசலட்சுமி தட்டுகிற நேரமிது’ என்ற பாடலை சுசி கோரஸாக கிக்காக பாடி இருக்கிறார்,
பாடல் வீடியோவின் பின்னணியில் மது பாட்டில்கள், கூல் டிரிங்க்ஸ், சிப்ஸ் பாக் கெட்டுகள் அடுக்கி வைத்து பகிர்ந்திருக் கிறார்.
பாடகி சுசித்ரா சில ஆண்டுகளுக்கு முன் பிரபல நடிகர், நடிகைகளின் அந்தரங்க லீலைகளை இணையதளத்தில் வெளி யிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோ னா ஊரடங்கு விதியை மீறி கடை திறந்து வைத்திருந்தாக கூறி சாத்தான் குளத்தில் தந்தை, மகன் போலீஸாரால் அடித்து கொல்லப்பட்ட சமபவம்பற்றி சுசித்ரா நேரடியாக பேசி வீடியோ வெளி யிட்டார். பிறகு மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத் தால் அந்த வீடியோவை நீக்கினார் சுசித்ரா.