நாகை: புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சீர்காழி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாப்புக்கு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற னர்.

இந்த நிலையில்,  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் இன்று நாகை மாவட்டம் வருகைபுரிய உள்ள நிலையில், முதல்வர் விழாவில் பங்குபெற உள்ளவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், சீர்காழி  எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே, மயிலாடுதுறை திமுக எம்.பி.  சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி குணமானது குறிப்பிடத்தக்கது.