கொரோனா அச்சுறுத்தலால் நாட்டில் அனைத்து மக்களும் பொருளாதார நெருக்கடியில் முடங்கி போயுள்ளனர் .
இதனால் மத்திய அரசு மாநில அரசு திரையுலகினர் என அவர்கள் அவர்கள் பங்குக்கு ஏதாவது செய்து கொண்டு தான் உள்ளனர் .
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில்பராமரிக்கப்படும் வெள்ளைப்புலியின் 4 மாத பராமரிப்புசெலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
‘விலங்குதத்தெடுப்பு’திட்டத்தின்கீழ் ‘அனு’ என்னும் வெள்ளைப் புலியை மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்து எடுத்துள்ளார். 2018-ம் ஆண்டுமுதல் இப்புலியை தொடர்ந்து தத்தெடுத்து வருகிறார் என வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.