விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.

நேற்று (செப்டம்பர் 10) மாரடைப்புக்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

வடிவேல் பாலாஜியின் மறைவு சிவகார்த்திகேயனை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ ஆகியோரின் கல்விச் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

‘அது இது எது’ நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்த போது, அதில் வரும் ‘சிரிச்சா போச்சு’ சுற்றில் வடிவேல் பாலாஜி தான் பங்கேற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது .