சிவகாசி:
சிவகாசியில் அருகே உள்ள விஸ்வநத்தம் ஆணைக்கூட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி விபத்து நடைபெற்றது.
பட்டாசு
சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆணைக்குட்டம் கிராம பகுதியில் சிந்து டிரான்ஸ்போர்ட் பட்டாசு ஆலை உள்ளது.  இங்கு உள்ள குடோனில் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உராய்தல் காரணமாக படடாசு வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
குறைந்தது அரை மணி நேரம் குடோனில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
ப ட்டாசு குடோன்  பட்டாசு தயாரிக்கும் ஆலையைவிட்டு தூரமாக இருந்தபடியால் பட்டாசு ஆலை விபத்தில் இருந்து ஆலை  தப்பியது. இந்த விபத்தில்  பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சாம்பலாயின.
வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்