‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன்.
தற்போது கன்னடத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். முன்னணி நடிகரான சிவ ராஜ்குமார் மற்றும் டாலி தனஞ்ஜெயா இணைந்து நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் மில்டன்.
இந்தப் படத்தை விஜய் மில்டனின் ரஃப் நோட் நிறுவனமும், கிருஷ்ணா கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
கதை, திரைக்கதை, இயக்கம் மட்டுமன்றி ஒளிப்பதிவையும் சேர்த்து விஜய் மில்டன் கவனிக்கவுள்ளார். அனூப் சீலின் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.


சிவ ராஜ்குமாரின் பிறந்த நாளான இன்று படத்தின் அறிவிப்பை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .