திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில், முன்னாள் முதன்மைச்செயலாளர் சிவசங்கரன், மருத்துவமனையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகளால் காரில் அழைத்துச் செல்லப்படும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கேரளாவை உலுக்கி வரும்,  தங்கம் கடத்தல் வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கேரள முதல்வரின் முதன்மைச்செயலாளர் சிவசங்கரன் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்,  உடல்நலம் பாதிப்பு எனக்கூறி மருத்துவமனையில் சேர்ந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவசங்கரன் இன்று திடீரென திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.  அதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து  அமலாக்கத்துறையினர், சுங்க இலாகா அதிகாரிகளும் மருத்துவமனையில் காத்திருந்து கண்காணித்து வந்தனர்.

தற்போது சிவகங்கரின் உடல்நிலை தேறியதைத் தொடர்ந்து,  காத்திருந்த அமலாக்கத்துறையினர், அவரை விசாரணைக்காக மருத்துவமனையில் இருந்து காரில் கொச்சிக்கு அழைத்துச்சென்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.