கண்ணூர்:

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்ரப். சிபிஎம் கட்சி பிரமுகர்.

இவர் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி ஆட்டோமொபைல் கடைக்கு சென்றார். அப்போது அந்த கடைக்குள் முரட்டுத்தனமாக புகுந்த 6 பேர் அஷ்ரப்பை வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ், பாஜக சேர்ந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலைக்கு அரசியல் நோக்கம் தான் காரணம் என தெரியவந்தது. இந்த வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வினோத், 6 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 70 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு கூறினார்.