ரியாத்

ண் நன்பர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய ஆறு பள்ளி மாணவிகளின் தலைய வெட்ட வேண்டும் என சவுதி அரேபிய அரசு ஆணையிட்டுள்ளது.

அரேபிய நாடுகளில் இன்னும் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை என்பது தெரிந்ததே.   இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் தற்போது தான் அரசு பெண்களுக்கு வாகனம் செலுத்த உரிமை அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.  அது மட்டும் இன்றி மரண தண்டனை விதிக்கப்பட்டால் பொது இடத்தில் அனைவர் முன்னிலையிலும் தலையை வெட்டி அந்த சடலத்தை ஊரார் முன்பு காட்சிப் பொருளாக வைக்கும் வழக்கமும் உண்டு

சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த பள்ளி மாணவி ஃபாத்திமா அல் குவைன்.   இவர் தனது தோழிகள், மற்றும் ஆண் நண்பர்களுடன் இவருடைய வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார்.  இது குறித்து ஃபாத்திமாவின் பக்கத்து வீட்டுக்காரர் சவுதி போலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.   ஃபாத்திமாவின் வீட்டுக்கு போலிசார் விரைந்த போது ஃபாத்திமா மற்றும் அவரது பள்ளித் தோழிகள் ஆகியோர் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடியதைக் கண்டனர்.    போலிசார் கைது செய்து விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கை ஷரியா குழு என்னும் ஆண்கள் மட்டுமே அடங்கிய குழு விசாரித்து வந்தது.   ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் பெண்கள் ஆறு பேருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டது.   அந்த ஆண் நண்பர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.    இந்த தீர்ப்பு ஜூலை மாதம் வெளியாகி உள்ளது.   ஆனால் இப்போது தான் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.    இந்த தீர்ப்பு  மனித உரிமை மீறலான ஒன்று என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.  இதே கருத்தை தெரிவித்த அகில உலக பெண்கள் உரிமை ஆணையம் உடனடியாக இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.  இது குறித்து சவுதி அரசு எந்த முடிவையும் இன்னும் தெரிவிக்கவில்லை,