சென்னை:

புதிய நிதித்துறை செயலாளராக எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஒய்வு பெற்றார்.

இதனையடுத்து, தமிழக நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம், தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, புதிய நிதித் துறை செயலாளராக எஸ். கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

1989-ம் பணியில் சேர்ந்த எஸ்.கிருஷ்ணன், 1991-92ம் ஆண்டு கடலூர் உதவி கலெக்டராக பணியாற்றினார்.
1997-2000-ம் ஆண்டு வரை விருதுநகர் கலெக்டராக பணியாற்றினார்.

நிதி சார்ந்த துறையில் நீண்ட அனுபவம் உள்ளவர்.
கடந்த 2008-ம் ஆண்டு சர்வதேச சந்தை பிரச்சினை உருவானபோது, அதற்கு தீர்வு காணும் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

ஜி20 மாநாட்டில் சர்வதேச நிதி கட்டமைப்பு மற்றும் உலகளாவிய நிதி பாதுகாப்பில் இந்திய அரசின் பிரதிநிதியாக கிருஷ்ணன் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.