சென்னை:

போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் போயஸ்கார்டன் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், அதிமுக.வினரும் போயஸ்கார்டன் பகுதியை நோக்கி திரண்டுள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பிரதமர் மோடி ஒழிக என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டுக் கொண்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.