மனித செல்களுக்குள் SARS-CoV-2 வைரஸ் பெரும் அளவில் உருவாகுவதைக் தடுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்டிபாடிகளுக்கு மரபணுவைப் பிரித்தெடுக்க ஆய்வாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இது வைரஸின் பெரும் அளவிலான உருவாக்கத்தை அனுமதிக்கும் அல்லது பாதிக்கும்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இன்றுவரை மிகச்சிறிய உயிரியல் மூலக்கூறு ஒன்றை பிரித்தேடுத்துள்ளனர். அது COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸை முழுமையாக செயலிழக்கச் செய்கின்றன எனக் கண்டறிந்துள்ளனர். முழு அளவிலான ஆன்டிபாடியை விட இது பத்து மடங்கு சிறியது. இதை விஞ்ஞானிகள் ஏபி 8 என அழைக்கின்றனர். இது SARS-CoV-2 க்கு எதிரான ஒரு சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படலாம் என்று செல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் சுப்பிரமணியம் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், எலிகள் மற்றும் வெள்ளெலிகளில் SARS-CoV-2 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் Ab8 மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதன் சிறிய அளவு திசுக்களில் பரவி  வைரஸை சிறப்பாக செயலிழக்கச் செய்வதற்கான திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உள்ளிழுத்தல் உள்ளிட்ட மாற்று வழிகளால் மருந்தை நிர்வகிப்பதை சாத்தியமாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த மருந்து மனித செல்களுடன் இணையாது. எனவே இது மனிதர்களில் எதிர்மறையான பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.  “ஏபி 8 COVID-19 க்கான சிகிச்சையாகும் திறனைக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், சிறந்த SARS-CoV-2 தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படலாம்” என்று அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு இணை ஆசிரியர் ஜான் மெல்லர்ஸ் கூறினார்.

“பெரிய அளவிலான ஆன்டிபாடிகள் பிற தொற்று நோய்களுக்கு எதிராக செயல்பட்டு நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இது COVID-19 நோயாளிகளுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கக்கூடும் என்றும், நோய்த்தொற்று இல்லாத மற்றும் நோயெதிர்ப்பு இல்லாதவர்களின் பாதுகாப்பிற்காகவும் இது உதவும் என்று நம்புகிறோம்” என்றும் மெல்லர்ஸ் கூறினார். சிறிய ஆன்டிபாடி கூறு என்பது ஒரு இம்யூனோகுளோபூலின் மற்றும் இது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை ஆன்டிபாடி ஆகும். SARS-CoV-2 ஸ்பைக் புரதத்தைப் பயன்படுத்தி 100 பில்லியனுக்கும் அதிகமான புரோட்டீன்கள் கொண்ட ஒரு குளத்தில் இது தனித்து அறியப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இறுதியாக, SARS-CoV-2 வைரஸைத் தடுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்டிபாடிகளுக்கு உரிய ஜீனை பிரித்தெடுக்க ஆய்வாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இது கொரோனா வைரஸின் பெரும் அளவிலான உற்பத்தி தடுக்கப்படும்.