சிட்னி: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இம்முறை இடம்பெற்றிருப்பது அவர்களுக்கு கூடுதல் பலம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள இந்திய வீரர் புஜாரா, அதேசமயம் வெற்றி என்பது எளிதாக கிடைத்துவிடக் கூடியதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-19ம் காலகட்டத்தில், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை, கடந்த 71 ஆண்டுகால வரலாற்றில், இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றியது.

அத்தொடரில், இந்தியாவின் பேட்டிங் நட்சத்திரம் புஜாரா சிறப்பாக செயல்பட்டு, மொத்தம் 3 சதங்களை விளாசினார் மற்றும் 500க்கும் அதிகமான ரன்களை மொத்தமாக குவித்தார்.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் கடந்த முறையைப் போலவே, இம்முறையும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார் அவர்.