ஜெய்ப்பூர்,

சுவைக் கடத்துபவர்கள் கொல்லப்படுவார்கள் என்று  ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்துக்குட்பட்ட ராம்கர் தொகுதியில் டிரக் ஒன்றில் பசுக்களை கடத்திச் சென்றதாக வந்த தகவலை தொடர்ந்து, ஒரு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், டிரக் ஓட்டி வந்த ஷாகிர்கான் என்பவரை அந்த கும்பலிடம் இருந்து மீட்டு கைது செய்தனர். மேலும் அந்த டிரக்கில் இருந்த 8 பசுக்களையும் மீட்டனர். அதைத்தொடர்ந்து அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த  ராம்கர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஞான் தேவ் அஹுஜா யாரேனும் பசுவைக் கடத்துவதோ பசுவதை செய்வதோ தெரிய வந்தால், அவர்கள் கொல்லப்படு வார்கள் என்றும், நாட்டில் பசு உயர்வானதாகக் கருதப்படும்போது அதனை ஏன் கடத்துகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜக எம்எல்ஏவின் பகிரங்க கொலை மிரட்டல் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.