dhanush-news
தனுஷின் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் கொடி இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (05/10/16) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார் பேசியதாவது.
நான் இந்த கதையை தனுஷ் சாரிடம் சொன்னவுடன் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது இதனால் அவர் உடனடியாக இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்ல இந்த திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், அவரிடம் முதலில் நான் கதையை சொன்னவுடன் அவர் தம்பி நா இந்த மாதிரியான கதைகளில் நடிப்பதில்லை நான் இயக்கும் திரைப்படத்தில் தான் நடிப்பேன் என்றார்.
நானும் சரி வேறு யாரையாவது தான் நாம் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வந்த போது ஒரு நம்பரில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது அதில் பேசியது எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் தான். தம்பி நா இந்த படத்தில் நடிக்க வருகின்றேன் என்றார் எனக்கு ஒரே குழப்பம் அதன் பின் அவர் கூறியது என் மனைவியிடம் நீ சொன்னதை சொன்னேன் ஹீரோ யார் என்று என்னை கேட்டாள், நான் தனுஷ் என்றேன் உடனடியாக தனுஷ் படத்தை வேண்டாம் என்று விட்டீர்களா என்று கூறி என்னை ஒப்புக்கொள்ள வைத்துவிட்டனர் என்று கூறினாராம்.
விஜய் வீட்டில் தனுஷுக்கு எந்த அளவுக்கு மாஸ் இருக்கும் என்று தனுஷ் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்.