புதுச்சேரியில் அண்மையில் நடந்த தி.மு.க.பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டார்.

அவர் பேசும் போது “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிடும்” என அறிவித்தார்.

இதனால் புதுச்சேரியில் தி.மு.க. தனித்து நிற்கும் என செய்திகள் பரவின.

இது குறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

“இந்த பிரச்சினையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டார். தி,மு.க. – காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்” என அவர் கூறி உள்ளார்.

“எங்கள் தலைவர் ராகுல் காந்தியும் ஸ்டாலினே முதல்வர் என அறிவித்துள்ளார்” என நாராயணசாமி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“காங்கிரஸ்- தி.மு.க. இடையே ஆன கருத்து வேறுபாடுகளுக்கு இரு கட்சி தலைவர்களும் தீர்வு காண்பார்கள்” என நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

– பா. பாரதி