சென்னை:

‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்பது போல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அருமை தெரியாமல் சிலர் பேசி வருவதாக அவரது மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 89வது பிறந்த நாள் விருது வழங்கும் நிகழ்ச்சி ஆழ்வார்ப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைப்பெற்றது. இதில் சிவாஜிகணேசனுடன் நடித்த நடிகைகள் எஸ்.என் பார்வதி, பாரதி விஷ்னுவர்தன், தயாரிப்பாளர் குகநாதன், நடிகர் விசு, படதொகுப்பாளர் லெனின் ஆகியோருக்கு நடிகர் திலகம் சிவாஜி விருது வழங்கப்பட்டது.

இதில் சிவாஜின் மூத்த மகன் ராம்குமார் பேசுகையில்,‘‘ நல்லவர்கள் நினைப்பது ஒன்று தான். அது தமிழகத்தில் நடப்பதில்லை. மற்றவர்களை வாழ்க என்று சொல்லியே நாம் பழகிவிட்டோம். இன்று நமக்கே வாழ்க சொல்லி கொள்ள வேண்டியது நிலை ஏற்பட்டுள்ளது. சிவாஜியின் அருமை தெரியாமல் சிலர் பேசுகின்றனர். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது போல உள்ளது’’ என்றார்.