சென்னை:

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று தீபா அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “எனது அத்தை  ஜெயலலிதாவின் எந்த சொத்துக்களும் எனக்குத் தேவையில்லை. அவர், பயன்படுத்திய பேனா மட்டுமே போதும்” என்று தீபா தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலும் போட்டியிடுவோம். இன்று மாலையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்” என்றார்.

அவரது சகோதரர் தீபக், திடீரென சசிகலா அணிக்கு எதிராக பேசுவது குறித்து கேட்டபோது, “தீபக் பேசுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது., இதில் ஏதோ சதி இருக்கிறது. தீபக்  பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்”  என்றார்.

ஓ. பன்னீர் செல்வம் அணியினருடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு, “தற்போதைக்கு அந்த எண்ணம் எதுவும் இல்லை என்றும் காலம்தான் பதில் சொல்லும்” என்றார்.

மேலும் அவர், “அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்க சசிகலா உறவினர்களுக்கு தகுதியில்லை. முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர்.  சசிகலா அணியில் ஒருபோதும் சேரமாட்டேன்”  என்று தீபா தெரிவித்தார்.