நெல்லை:

ந்தையின் குடிப்பழக்கத்தால் மனவேதனை அடைந்த மகன் தற்கொலை செய்துகொண்ட மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நெல்லையில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை செய்துகொண்ட  தினேஷ்

நெல்லையைச் சேர்ந்த நல்லசிவன் என்பவரின் மகன் தினேஷ். நல்லசிவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சண்டையிடுவது இவரது வழக்கம்.

கடிதம்

இதனால் மனம் வெறுத்தப்போன நல்லசிவனின் மகன் தினேஷ் இன்று காலை நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது கையில் இருந்த கடிதத்தில், தந்தையின் குடிப்பழக்கத்தால் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொள்வதாக எழுதி வைத்திருந்தார்.

மேலும் இனியாவது தந்தை குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் இல்லாவிட்டால் அவர் தனது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் எழுதியுள்ளார்.

அதோடு, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினேஷ் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக காத்திருந்தார். பத்தாம் வகுப்பில் 500க்கு  464 மதிப்பெண் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.