இலங்கையைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தமிழ் இசைக் கலைஞர்கள் இணைந்து எஸ்.பி.பிக்கு ‘’எழுந்து வா இசையே…’’எனத் தொடங்கும் அஞ்சலிப் பாடல் ஒன்றைப் பாடி, காணொலி வடிவில் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் பிரபல கவிஞர் அஸ்மின் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இசையமைப்பாளர் அருண் குமாரசுவாமி இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

பாடலை இலங்கையின் பிரபலமான பாடகர்களான எம்.சிவகுமார், கே.மகிந்தகுமார், பிரேமானந்த், சுருதி பிரபா, நிலுக்ஸி ஜெயவீரசிங்கம், நித்தியானந்தன், கிருஷ்ணகுமார், கந்தப்பு ஜெயந்தன், கே.சுஜீவா, மடோனா, அருண்குமாரசுவாமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.