டில்லி:

வஹர்லால் நேருவின் 55வது நினைவு நாளையொட்டி, சாந்தி வனத்தில் உள்ள அவரது சமாதியில் சோனியா, ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நவீன இந்தியாவின் சிற்பி என அழைக்கப்படுபவரும், நாட்டின் முதல் பிரதமருமான  பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் அவரதுரு உருவப்படுத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்தி வருகின்றனர்.

டில்லியில் உள்ள நேருவின்   நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் நேரு நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.