இந்தி நடிகர் சோனு சூட், பெரும்பாலும் வில்லன் வேடங்களிலேயே நடித்து வந்தார்.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்த சமயத்தில், அவர்களை தனது சொந்த பணத்தில் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அவர்களுக்கு பண உதவியும், பொருள் உதவியும் செய்து, மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சோனுசூட் மனிதாபிமானம் வெளிப்பட்ட நிலையில், அவரை தேடி ஹீரோ வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

சோனுசூட் – டைரக்டர் நிவாஸ் – தயாரிப்பாளர் ராஜ் சாண்டில்யா

‘கிசான்’ ( விவசாயி) என்ற புதிய இந்தி படத்தில் சோனுசூட் நடிக்க உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிவாஸ் டைரக்டு செய்யும் இந்த படத்தை ராஜ் சாண்டில்யா என்பவர் தயாரிக்கிறார்.

இவர் ‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் இயக்குநர் ஆவார்.

“விவசாயிகள் நாட்டின் பெருமைக்கு உரியவர்கள். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடக்கும் நேரத்தில் ‘கிசான்’ படத்தை தயாரிப்பதில் பெருமை” என ராஜ் சாண்டில்யா தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி