சென்னை

ரும் 2026 ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டம் முடிவடைந்து விரைவில் லட்சம் பேர் பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2 பாதைகளில் 45 கிமீ தூரத்துக்கு ரயில்களை இயக்கி வருகிறது.  இதன் 2 கட்டமாக 3 பாதைகளில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் துடக்க விழா நேற்று சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது.  வில்லிவாக்கத்தில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்தப் பணியைச் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி காணொலி மூலம் தொடங்கி வைத்தர்.   அப்போது வில்லிவாக்கத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரம் சுரங்கத்துக்கான குழியைத் தோண்டும் பணியைத் தொடங்கி உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் இது குறித்து, ”சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக 2-ம் கட்டமாக அமைக்கப்படும் 3 திட்டங்களில் ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரம் கொண்ட பாதை அமைக்கப்படுகிறது.  இந்தத்திட்டத்தில் 128 ரெயில் நிலையங்களும், மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் ரயில்களை பராமரிக்கும் பணிமனைகளும் அமைக்கப்படுகின்றன.

இந்த திட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது.

இதில் மாதவரம் பால்பண்ணை முதல் சிப்காட் வரை உள்ள 3-வது வழித்தடம் 45.8 கி.மீ. நீளத்தில் வடக்கு தெற்கு வழித்தடமாகும்.  இந்த பாதை தகவல் தொழில்நுட்ப வழித்தடம், அடையாறு, மயிலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைக்கிறது.  இங்குச் சுரங்கப்பாதையில் 30 ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் 20 ரயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.

அடுத்ததாகக் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 4-வது வழித்தடம் 26.1 கி.மீ. நீளத்திற்குக் கிழக்கு மேற்கு வழித்தடமாக அமைகிறது.   இது நகரத்தின் வணிகப்பகுதிகளான நந்தனம், தியாகராயநகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர் மற்றும் பூந்தமல்லியை இணைக்கிறது. இங்கு உயர்த்தப்பட்ட பாதையில் 18 ரயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 12 ரயில் நிலையங்களும் அமைகிறது.

தவிர மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. நீளத்தில் சுற்று வட்ட வழித்தடம் அமைகிறது. இது வில்லிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம் மற்றும் மேடவாக்கம் ஆகியவற்றை இணைக்கிறது. இங்கு உயர்த்தப்பட்ட பாதையில் 42 ரயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 6 ரயில் நிலையங்களும் வர உள்ளன.

2021 ஆம் ஆண்டு இறுதியில் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை உள்ள 9.051 கி.மீ. தூர விரிவாக்கப்பணிகள் முடிவடைந்து போக்குவரத்துக்காகத் திறக்கப்பட உள்ளது.

 சென்னை நகரில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளில் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டு நிறைவடையும்.

அதன் பிறகு தற்போது உள்ள 45 கி.மீ. தூரத்தையும் சேர்த்து மொத்தம் 173 கி.மீ. தூரத்திற்கு ரயில் இயக்கப்படும்.  இந்த பாதைகளின் மூலம் தினமும் 25 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும்.  இது பொது போக்குவரத்து பயணங்களில் 25 சதவீதம் அளவில் இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்