கைச்சுவை நடிகர் சூரி தன்னுடைய த பிறந்தநாளை நேற்றுமுந்தினம் வீட்டிலி ருந்தபடியே கொண்டாடினாலும் அவரது மனற ரசிகர்கள் வெவ்வேறு ஊரகளில் ரவுண்டு கட்டி நற்பணிகளில் ஈடுபட்டனர்.

ரசிகர்களின் நற்பணியைபாராட்டிய சூரி தூய்மைப்பணியாளர்களுக்கு ரசிகர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்ததை பாராட்டி உள்ளார். இதுபற்றி சூரி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:‌


அனைவருக்கும்‌ வணக்கம்‌, உங்கள்‌ அன்பு எனும்‌ வாழ்த்து மழையால்‌ என்னை முழுவதும்‌ நனையவைத்து என்‌ பிறந்த நாளை சிறந்த நாளாய்‌ மாற்றிய உங்கள்‌ அனைவருக்கும்‌ எனது இதயம்கனிந்த நன்றிகள்‌. என்‌ பிறந்தநாளுக்கு வாழ்த்துகள்‌ கூறிய தயாரிப்பாளர்கள்‌, இயக்குனர்கள்‌, நடிகர்கள்‌, நடிகைகள்‌, பத்திரிக்கை மற்றும்‌ ஊடக நண்பர்கள்‌, சமூக வலைதள நண் பர்கள்‌ அனைவருக் கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.
என்‌ நற்பணி மன்றம்‌ சார்பில்‌ பல மாவட்டங்களில்‌ குருதிக்கொடை கொடுத் தும்‌ அன்னதானங்கள்‌ வழங்கியும்‌, இந்த கொரோனா காலகட்டத்தில்‌ மிகவும்‌ சிறப் பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும்‌ விதமாக பொன்னாடை அணிவித்து உணவு மற்றும்‌ அத்தியாவசிய பொருட்களை வழங்கியும்‌ மரக்கன்று களை நட்டும்‌ ஆதரவற்றோர்‌ மற்றும்‌ முதியோர்‌ இல்லங்களுக்கு உணவு மற்றும்‌ உடைகளை வழங்கிய என்‌ உடன்‌ பிறவா சகோதரர்களாகிய ரசிகர்கள்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. சிறப் பாக செயல்பட்ட அனைத்து மாவட்ட ரசிகர்களுக்கும்‌, ரசிகர்களை வழி நடத்தும்‌ நற்பணி மன்ற தலைவர்களுக்கும்‌ எனது இதயம்‌ கனிந்த நன்றியை காணிக்கையாக் குகிறேன்‌ நன்றி.
இவ்வாறு நடிகர் சூரி கூறி உள்ளார்.
நடிகர் சூரி பல்வேறு படங்களில் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும்நிலையில் வெற்றி மாறன் இயக்க உள்ள படத்தில் கதாநாயக னாக நடிக்க உள்ளார்.