புனே: தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில், இந்தியப் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த அணி வெறும் 190 ரன்களுக்கு மொத்தம் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டது.

இந்தியா சார்பில் வேகப்பந்து வீச்சாளர்களும் வேகப்பந்து வீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்களும் கூட்டணி அமைத்து தாக்குல் தொடுத்து தென்னாப்பிரிக்காவை திணறடித்து வருகின்றனர்.

இரண்டாம் நாள் முடிவிலேயே தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை மிகக்குறைந்த ரன்களுக்கு இழந்துவிட்ட நிலையில், இன்று மூன்றாம் ஆட்டம் துவங்கியது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூ பிளெசிஸ், குவின்டன் டி காக் மற்றும் டீன் எல்கர் ஆகியோர் இம்முறையும் ஏமாற்றினர். டூ பிளசிஸ் 64 ரன்களுக்கும், டி காக் 31 ரன்களுக்கும் நடையைக் கட்டினர்.

இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள், முகமது ஷமி மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா 1 விக்கெட் கைப்பற்றினார்.