தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தவர் உஷாராணி.

என் சங்கரன் நாயர் என்ற மலையாள இயக்குனரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் அரங்கேற்றம், என்னை போல் ஒருவன், பட்டிக்காட்டு பொன்னையா, சிவந்த கண்கள் என கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 200 படங்களுக்கு மேல் மலையாளத்தில் நடித்துள்ளார் .

சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.