புகழ்பெற்ற பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவரது தற்போதைய உடல்நிலையைப் பார்க்கும்போது, அவர் இன்னும் சில நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருக்க வேண்டி இருக்கும் என அவர் சிகிச்சைக் பெற்று வரும் MGM மருத்துவமனை அளித்துள்ள செய்திக்குறிப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடற்கூறுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன என்றும், அவரது உடல்நிலை நன்றாக முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை, அவர் இன்னும் சில நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக, அவரது மகன் எஸ்.பி. சரண்வெளியிட்ட வீடியோவில் எஸ்.பி.பி-யின் உடல்நிலை நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறினார். மீண்டும் எஸ்.பி.பி.-யின் கோவிட் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்ததாகவும் சரண் தெரிவித்தார்.