புதுடெல்லி: ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் போக்ஸாம் சர்வதேச குத்துச்சண்டை தொடரில், இந்தியாவில் மேரி கோம், 51கிகி எடைப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், இத்தொடரில் அவருக்கு ஒரு பதக்கம் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தற்போது 37 வயதாகும் மேரி கோம், கடந்தாண்டு ஜோர்டான் நாட்டில் நடந்தப் போட்டியில் பங்கேற்று, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றதிலிருந்து, வேறு எந்தப் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். தற்போது, இத்தொடரில் பங்‍‍கேற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தவிர, இந்தியாவின் சிம்ரன்ஜித் கெளர்(60 கிகி) மற்றும் ஜாஸ்மின்(57 கிகி) ஆகியோரும், இத்தொடரில், பதக்கம் வெல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.