திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிர மணியம் சென்ற 5ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சூளைமேடு தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3 தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல் வெளிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் அவர் விரைந்து குணம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்தும், வாழ்த்தும் தெரிவித்தனர். தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது.
இந்நிலையில் எஸ்.பி.பி. உடல்நிலை பற்றி அவரது தங்கை எஸ்.பி.சைலஜா ஆடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறிபிருப்பதாவது: ஒவ்வொரு நாளும் எஸ்.பி.பி-யின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. மருத்துவர்கள் அவருக்கு வென்டிலேட்டர் உதவியின்றி சிகிச்சை அளிக்க தொடங்கி உள்ளனர். அவருக்கு நினைவாற்றலில் முன்னேற்றம் ஏற்பட் டுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாகும். டாக்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந் தனர். அவர் குணம டைய நீங்கள் பிரார்த் தனை செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உலகம் முழு வதும் அவரைத் திரும்பப் பார்க்க விரும்பு கிறது. இந்த பின்னடைவுக்குப் பிறகு எனது சகோதரர் மகிழ்ச்சியுடன் வீடு திரும் புவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘அண்ணையா’ இதிலிருந்து மீள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு எஸ்.பி.சைலஜா தெரிவித்திருக்கிறார்.

ஆனால் எஸ்பிபி சரண் மாலையில் வெளியிட்ட வீடியோவில் கூறும்போது.’என் அப்பாவுக்கு செயற்கை முறையில் ஆக்ஸிஜன் செலுத்துவது நிறுத்த்ப்பட்டு  சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது. அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம் ஆனால் இன்னும் அவருக்கு செயற்கை முறையில்தான் ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சைஅளிக்கப்படுகிறது, உங்கள் அனைவரின பிரார்த்தனை அவரை மீட்டு கொண்டு வரும்” என்றார்.