சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந் நிலையில் இன்றும் ஒரு அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. அதில் எஸ்.பி.பி உடல்நிலை தற்போது சீராக உள்ளது, அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர், எக்மோ கருவிகள் உதவியுடன் சிகிச்சை தரப்படுகின்றன, எஸ்.பி.பியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.