கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலன் சற்று தேறி வருவதாக இரு நாட்கள் முன்பு கூட அவர் மகன் சரண் கூறியிருந்தார் .

இந்நிலையில் இன்று மாலை எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகிய நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நடிகர் கமல் விரைந்தார்.

எஸ்.பி.பி. மகன் சரணிடம் சிகிச்சை முறை குறித்து விசாரித்த பின் கமல் :-

எஸ்.பி.பி. நலமாக இருக்கிறார் என்று கூற முடியாது. உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது என கூறினார் .