சென்னை

பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது.

அதையொட்டி இந்த மாதம் 5 ஆம் தேதி அன்று அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 4 நாட்களுக்கு முன்பு எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

அதையொட்டி அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

நேற்று அவர் மயக்கநிலையில் இருந்து மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இன்று எஸ் பி பாலசுப்ரமணியம் மகன் எஸ் பி பி சரண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர்,

“கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை எஸ். பி. பி. உடல்நிலை சீராக உள்ளது.

எனது தந்தை எஸ்.பி.பி.க்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி”

என தெரிவித்துள்ளார்.