பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அவரது உடல்நிலை மோசமானது. அவரை தீவிர சிகிச்சை பிறகு குணம் அடைந்து வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று நீங்கியது.

 


தந்தையின் உடல் நிலை பற்றி சரண் இன்று வீடியோ வெளியிட்டி ருக்கிறார். அவர் கூறியதாவது:
எல்லோருக்கும் வணக்கம் எனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது நுறையீரலில் குணம் ஏற்பட்டு வரு கிறது அதனை எக்ஸ்ரே மூலம் காண முடிந்தது. அவரை எழுந்து அமரச் சொன்னபோது அவரால் படுக்கையிலி ருந்து எழுந்து 15 முதல் 20 நிமிடம் வரை உட்கார முடிகிறது. வாய் வழியாக உணவு உட்கொள்ள முடிகிறது. பிசியோதெரப்பி சிகிசையில் சுறுசுறுப்புடன் பங்கேற்கிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. எல்லாம் நல்லவிதமாக இருக்கிறது.
இவ்வாறு எஸ்பி.சரண் கூறினார்.