புதுச்சேரி:
ட்டமன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட எம்எல்ஏவுக்கு தொற்று உறுதியானதால், புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து  கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பட்ஜெட் கூட்டத் தொடரில் மூன்று நாட்கள் பேரவை கூட்டத்தில்  என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபால் கலந்துகொண்டார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, இன்று  புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டசபை அமர்வு திறந்தவெளியில் நடைப்பெற்றது. அதில் பட்ஜெட் விவாதம் நடத்தப்பட்டு ஒருமனதான நிறைவேற்றப்பட்டு, சட்டமன்றம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி,  சட்டமன்ற நிகழ்வில் கலந்துகொண்ட கதிர்காமம் தொகுதி எம்எல்ஏவுக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என முதலவர் உத்தரவிட்டுள்ளார்.